திருக்குறள்

1134.

காமக் கடும்புனல் உய்க்குமே நாணொடு நல்லாண்மை என்னும் புணை.

திருக்குறள் 1134

காமக் கடும்புனல் உய்க்குமே நாணொடு நல்லாண்மை என்னும் புணை.

பொருள்:

காதல் பெருவெள்ளமானது நாணம், நல்ல ஆண்மை எனப்படும் தோணிகளை அடித்துக்கொண்டு போய்விடும் வலிமை வாய்ந்தது.

மு.வரததாசனார் உரை:

நாணமும் நல்ல ஆண்மையுமாகிய தோணிகளைக் காமம் என்னும் கடுமையான வெள்ளம் அடித்துக் கொண்டு போய் விடுகின்றன.

சாலமன் பாப்பையா உரை:

ஆம்; நாணம், ஆண்மை என்னும் படகுகளைக் காதலாகிய கடும் வெள்ளம் அடித்துக் கொண்டு போய்விட்டது.